ETV Bharat / state

தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய நடிகர்!

author img

By

Published : Jun 5, 2021, 10:28 PM IST

actor balaji gave corona relief to drama artists
தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய நடிகர்

ஆரணியில் உள்ள நாடக கலைஞர்களுக்கு நடிகர் பூச்சி முருகன் சார்பில் நடிகர் தாடி பாலாஜி அரிசி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

தி.மலை: கரோனா ஊரடங்கால், கோயில் திருவிழா, இசைக் கச்சேரி, தெருக்கூத்து போன்றவை நடைபெறாமல் உள்ளது. இதனால், நாடக கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்டோர் வருமானமின்றி தவித்துவருகின்றனர். அதில், சிலருக்கு நடிகர் பூச்சி முருகன் சார்பில் தாடி பாலாஜி கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளார்.

திருவண்ணமாலை மாவட்டம் ஆரணியில் உள்ள 500க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களுக்கு அரிசி, மளிகைப் பொருள், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும், ஆரணி பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் 200பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கரூர் நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.