ETV Bharat / state

போலி பத்திரப்பதிவு செய்ததாக சார் பதிவாளர் தற்காலிக பணி நீக்கம்

author img

By

Published : Jul 20, 2022, 2:38 PM IST

போலி பத்திரப்பதிவு செய்த சார்  பதிவாளர்- தற்காலிக பணி நீக்கம் செய்த பத்திரப்பதிவு ஐஜி
போலி பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர்- தற்காலிக பணி நீக்கம் செய்த பத்திரப்பதிவு ஐஜி

போலி பத்திரப்பதிவு செய்ததாக திருவள்ளூர் சார் பதிவாளர் சுமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் :திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக சுமதி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஆவடி மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து திருவள்ளூர் சார்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் போலியான ஆவணங்கள் கொண்டு அதிக அளவில் பத்திரப்பதிவு திருமணங்கள் செய்து வைத்தது தொடர்பாக அவர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக பத்திரப்பதிவு ஐஜியிடம் புகார் அளிக்கப்பட்டது.


இன்று(ஜுலை 20) அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி சிவனருள் உத்தரவிட்டுள்ளார். இதனால் திருவள்ளூர் உள்ள சார்பதிர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்த சிலர் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் திரும்பி சென்றனர்.

இதையும் படிங்க:அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் - வங்கிகள் ஏற்றுக்கொண்டதாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.