ETV Bharat / state

கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி!

author img

By

Published : Jul 28, 2022, 4:32 PM IST

ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வருவாயாக கிடைத்துள்ளது.

கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வருவாய்
கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வருவாய்

திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும்.

இந்தத்திருக்கோயிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா கடந்த 21ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவிற்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்காண பக்தர்கள் மலைக்கோயிலுக்கு காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு தங்களது நேர்த்திக்கடனைச்செலுத்திவிட்டு உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றைச்செலுத்தினார்கள்.

பக்தர்கள் சார்பில் காணிக்கையாகச்செலுத்தப்படும் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று, திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம், மலைக்கோயில் தேவர் மண்டபத்தில் கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வருவாய்
கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி வருவாய்

இதில் 7 நாள் உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 93 லட்சத்து 57 ஆயிரத்து 307 ரூபாய் வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 544 கிராம், வெள்ளி 13 ஆயிரத்து 544 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

கடந்த 1 வாரத்தில் திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1¾ கோடி!

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மாநில முதல்வர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.