ETV Bharat / state

திமுக பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது!

author img

By

Published : Aug 9, 2022, 10:16 PM IST

திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது..!
திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது..!

திருவள்ளூர் அடுத்து திருத்தணி ஜெ.ஜெ.நகர்ப்பகுதியில் வசிப்பவர், மோகன். 35 வயதான இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மோகன் தனது வீட்டுக்கு ஜெ.ஜெ.நகர் பிரதானசாலையில் சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர், இவரை சரமாரியாக முகம், மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் கத்தியைக்கொண்டு வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார்.

இதனை அந்தப்பகுதி வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் பொதுமக்களுக்கும், மோகனின் உறவினருக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்தார். அதனை அடுத்து உடனடியாக மோகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச்சென்று போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் திருத்தணி முதல் அரக்கோணம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

இந்தக்கொலை வழக்கில் திருத்தணி ஜோதி நகரைச்சேர்ந்த சஞ்சய், வியாசர்பாடியை சேர்ந்த ரித்தீஷ், சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த விக்கி, ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2009இல் சஞ்சய் என்பவரின் சித்தப்பா சிவாவின் இரு கைகளையும் வெட்டிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டனர். பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து மூவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம்

திருவள்ளூர் அடுத்து திருத்தணி ஜெ.ஜெ.நகர்ப்பகுதியில் வசிப்பவர், மோகன். 35 வயதான இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மோகன் தனது வீட்டுக்கு ஜெ.ஜெ.நகர் பிரதானசாலையில் சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர், இவரை சரமாரியாக முகம், மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் கத்தியைக்கொண்டு வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மோகன் உயிரிழந்தார்.

இதனை அந்தப்பகுதி வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் பொதுமக்களுக்கும், மோகனின் உறவினருக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்தார். அதனை அடுத்து உடனடியாக மோகன் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச்சென்று போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் திருத்தணி முதல் அரக்கோணம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.

இந்தக்கொலை வழக்கில் திருத்தணி ஜோதி நகரைச்சேர்ந்த சஞ்சய், வியாசர்பாடியை சேர்ந்த ரித்தீஷ், சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த விக்கி, ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2009இல் சஞ்சய் என்பவரின் சித்தப்பா சிவாவின் இரு கைகளையும் வெட்டிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டனர். பின்னர் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து மூவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.