ETV Bharat / state

'கோவிந்தா கோவிந்தா' கோஷத்தில் அசைந்தாடி வந்த வீரராகவப் பெருமாள்!

author img

By

Published : Jan 27, 2020, 3:19 PM IST

கோவிந்தா கோவிந்தா கோஷத்தில் அசைந்தாடி வந்த வீர ராகவப் பெருமாள்
கோவிந்தா கோவிந்தா கோஷத்தில் அசைந்தாடி வந்த வீர ராகவப் பெருமாள்

பக்தர்களின் வெள்ளத்தில் 'கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்த வீரராகவப் பெருமாள் பொதுமக்களுக்கு அருள்பாலித்தார்.

திருவள்ளூரில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோயில். இந்தக் கோயில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 60ஆவது திவ்யதேசம் இத்திருத்தலமாகும்.

இக்கோயில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 21ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாளான 4ஆம் தேதி தை அமாவாசையையொட்டி உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ரத்தின அங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனையடுத்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த்திருவிழா நடந்தது. தேரோட்டத்தையொட்டி வீரராகவப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காலை திருத்தேரில் எழுந்தருளினார்.

மேளதாளம், நாதஸ்வரம் முழங்க வீரராகவப் பெருமாள் எழுந்தருளிய தேர் அசைந்தாடியபடி வீதியுலா புறப்பாடு தொடங்கியது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

கோவிந்தா கோவிந்தா கோஷத்தில் அசைந்தாடி வந்த வீர ராகவப் பெருமாள்

தொடர்ந்து, வடக்கு ராஜ வீதி, பஜார் தெரு, மோதிலால் தெரு வழியாக வீரராகவர் தேரில் அசைந்தாடி வரும் காட்சியைக் காண கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :'சவால் வேண்டாம்... களத்தில் இறங்குங்கள்' - கொங்கு ஈஸ்வரனுக்கு விவசாயிகள் கோரிக்கை

Intro:27-01-2020

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தை பிரமோற்சவ விழா 7ம் நாளான இன்று காலை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில், உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருத்தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.



Body:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தை பிரமோற்சவ விழா 7ம் நாளான இன்று காலை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில், உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திருத்தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 3ம் நாளான 2ம் தேதி கருட சேவை நடைபெற்றது. ஐந்தாம் நாளான 4ம் தேதி தை அமாவாசையையொட்டி உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ரத்தின அங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்திருவிழா இன்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காலை 4.45 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார்.
காலை 7 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க வீரராகவ பெருமாள் எழுந்தருளிய தேர் அசைந்தாடியபடி வீதியுலா புறப்பாடு தொடங்கியது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தொடர்ந்து, வடக்கு ராஜ வீதி, பஜார் தெரு, மோதிலால் தெரு வழியாக வீரராகவர் தேரில் அசைந்தாடி வரும் காட்சியை காண கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.