ETV Bharat / state

திருவள்ளூரில் இளைஞர் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

author img

By

Published : May 1, 2021, 10:57 AM IST

பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள இளைஞன் கைது
பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள இளைஞன் கைது

திருவள்ளூர் அருகே வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள இளைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூர் அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் (32) என்பதும், இவர் மீது ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி வழக்குகள் அதிகளவில் நடைபெறுவதால் தமிழரசனை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விடுதலைக் கருத்தியலை வித்திட்ட நாள் - திருமாவளவன் ‘மே தின’ வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.