ETV Bharat / state

திருவள்ளூர் மாவட்டத்தில் பூமிக்கடியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு!!

author img

By

Published : Dec 5, 2022, 12:13 PM IST

Updated : Dec 5, 2022, 6:06 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் பூமிக்கடியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பூமிக்கடியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு

மாளந்தூர் மற்றும் ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் பூமிக்கடியில் பழங்கால ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

திருவள்ளூர்: பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் ஒன்றை பூமிக்கு அடியில் கண்டெடுத்தனர்.

பின்னர், அதனை வெடிகுண்டு நிபுணர்கள் குழு ஆய்வு செய்து திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பாக வைத்தனர்.

இந்நிலையில் ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் குப்பன் என்ற விவசாயி தனது வீட்டின் பின்புறம் மாட்டுக் கொட்டகை அமைக்க பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது சுமார் 2 அடி உயரம் கொண்ட ராக்கெட் லாஞ்சர் போன்ற குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பூமிக்கடியில் ராக்கெட் லாஞ்சர்கள் கண்டெடுப்பு

இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள மைதானத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அதற்கு நடுவில் அந்த குண்டினை வைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொரோனாவால் பலியான மருத்துவர் மனைவிக்கு பணி வழங்க ஆணை!

Last Updated :Dec 5, 2022, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.