ETV Bharat / state

திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

author img

By

Published : Jun 5, 2019, 11:01 AM IST

பலத்த காற்றுடன் மழை

திருவள்ளூர் : திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடைக்காலம் தொடங்கியது முதல் அக்னி நட்சத்திரம் முடியும் வரை திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் ஒரு மணி நேரமாக இடைவிடாது பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

பலத்த காற்றுடன் மழை
இதற்கிடையே, திருத்தணி பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரமாக மழை பெய்ததில், மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் இடைவிடாத பெய்த மழையால் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.
Intro:திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.கோடை காலம் தொடங்கியது முதல் அக்னி நட்சத்திரம் முடியும் வரை திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் இன்று திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் ஒரு மணி நேரமாக இடைவிடாது பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.குறிப்பாக திருத்தணி பள்ளிப்பட்டு ஆர்கே பேட்டை நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரமாக மழை பெய்து சில இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இருப்பினும் இடைவிடாத பெய்த மழையால் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.