ETV Bharat / state

அப்பா படிக்க சொன்னது ஒரு குத்தமா? - இன்ஸ்டா குயின் திடீர் தற்கொலை!

author img

By

Published : Mar 30, 2023, 1:15 PM IST

Updated : Mar 30, 2023, 1:39 PM IST

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த மகளை தந்தை படிக்கச் சொல்லி கண்டித்ததால் டிக்டாக் குயின் என அழைக்கப்படும் 9 வயது சிறுமி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிரதிக்‌ஷா (வயது 9). அதே பகுதியில் உள்ள பிரபல தனியார்ப் பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்கிழமை(மார்ச் 28) இரவு பிரதிக்‌ஷா வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

முழு ஆண்டுத் தேர்வு சமயம் என்பதால் விளையாட்டைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு தந்தை கிருஷ்ணமூர்த்தி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலிலிருந்த பிரதிக்‌ஷா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டில் மயங்கிய நிலையில் கீழே கிடந்த பிரதிக்‌ஷாவை மீட்ட பெற்றோர் உடனடியாக சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுமி பிரதிக்‌ஷா உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருவள்ளூர் நகர போலீசார் சிறுமியின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமி பிரதிக்‌ஷா இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டவர். தனது நேர்த்தியான கண் அசைவுகள், நடிப்புத் திறமையால் இன்ஸ்டா குயின் என்று அவரை அவரது ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை என்பது எதற்குத் தீர்வு அல்ல. தற்கொலை தொடர்பான எண்ணம் உங்கள் தோன்றினால் உடனடியாக மனநல ஆலோசனைகளைப் பெற ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையம் - 044 24640050 எண்ணைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்.

இதையும் படிங்க: ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த கணவர்!

Last Updated :Mar 30, 2023, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.