ETV Bharat / state

ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் தற்கொலை: குடும்பத் தகராறு காரணமா?

author img

By

Published : Sep 12, 2020, 2:18 PM IST

திருவள்ளூர்: ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

mother-committed-suicide-by-hanging-with-his-child
mother-committed-suicide-by-hanging-with-his-chmother-committed-suicide-by-hanging-with-his-childild

திருவள்ளூர் மாவட்டம் புழல் கன்னடபாளையம் ஜீவா தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ரஞ்சித்குமார் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பாக்கியலட்சுமி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மித்ரன் என்று ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.

கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாலை வேலை முடித்து பாக்கியலட்சுமியின் மாமியார் சாந்தி வீட்டிற்கு வந்துள்ளார். அவர் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது குழந்தையுடன் தாய் பாக்கியலட்சுமி தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கிட்ட நிலையில் இருந்த தாய், குழந்தை இருவரது சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கணவர் ரஞ்சித்குமார், அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலி: சிசிடிவி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.