ETV Bharat / state

'நமது அம்மா படிப்பவர்கள் அறிவாளிகள்' - அமைச்சர் காமராஜ்

author img

By

Published : Jan 19, 2020, 3:26 PM IST

minister
minister

திருவாரூர்: நமது அம்மா படிப்பவர்கள் சிறந்த அறிவாளியாகவும், சிறந்த பொதுநலவாதிகளாகவும், மக்கள் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு வாக்களித்த, குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார்.

'நமது அம்மா படித்தால் அறிவாளி'

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'நமது அம்மா தினசரி நாளிதழைப் படித்தால் அறிவாளியாகவும், பொதுநலவாதியாகவும், மக்கள் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள். எனவே அனைவரும் நமது அம்மா படிக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுபெய்த மழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்துள்ளன. தற்போது மழையின்றி வெயில் இருப்பதால் நிலைமை சீராகும். நிலைமை சீராக இல்லையெனில் நாளை மறுநாள் தஞ்சாவூரில் விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்களைக் கொண்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்குத் தீர்வு காணப்படும்' என்றார்.

'நமது அம்மா' படிப்பவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள் - அமைச்சர் காமராஜ்

இதையும் படிங்க: 'முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் எனப் பொருள்' - ரஜினிக்கு முரசொலி பதிலடி

Intro:


Body:நமது அம்மா படிப்பவர்கள் சிறந்த அறிவாளியாகவும், மக்கள் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள் என அமைச்சர் காமராஜ் பேட்டி.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்ததில் தங்களுக்கான பிரதிநிதிகளை மக்கள் தேர்வுசெய்துள்ளனர். இதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு வாக்களித்த குடவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது, நமது அம்மா பத்திரிகை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து தான் தன்னுடைய கருத்து எனவும், நமது அம்மா பத்திரிக்கையை படித்தால் அறிவாளியாகவும், பொதுநலவாதியாகவும், மற்றும் மக்கள் தொண்டு செய்பவர்களாகவும் இருப்பார்கள். எனவே அனைவரும் நமது அம்மா படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்துள்ளது. தற்போது மழை இன்றி வெயில் இருப்பதால் நிலைமை சீராகும். நிலைமை சீராக இல்லையெனில் நாளை மறுநாள் தஞ்சாவூரில் விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளை கொண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.