இருசக்கர வாகனம் திருட்டு: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

author img

By

Published : Nov 22, 2021, 6:12 AM IST

இருசக்கர வாகன திருட்டு தொடர்பான காணொலி

சோழவரம் அடுத்த காரனோடையில் இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்: சோழவரம் அடுத்த பண்டிகாவனூரைச் சேர்ந்தவர் ஏழுமலை (53). இவர் காரனோடையில் உள்ள டிராக்டர் மெக்கானிக் கடையில் வேலை செய்கிறார். இந்நிலையில் ஏழுமலை நேற்று முந்தினம் (நவம்பர் 20) பணிநிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் ஏழுமலை கடைக்குத் திரும்பியபோது, கடையின் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்வது தெரியவந்தது.

இருசக்கர வாகன திருட்டு தொடர்பான காணொலி

இது குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் ஏழுமலை புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரித்துவருகின்றனர். இருசக்கர வாகனத் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரைப் பதைபதைக்கச் செய்துள்ளன.

இதையும் படிங்க: காவல் நிலையம் வரைவந்த அந்த உறவு.. கையை கிழித்துக் கொண்ட பெண்.. திருவொற்றியூரில் ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.