ETV Bharat / state

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!

author img

By

Published : Oct 2, 2020, 12:49 AM IST

ஆந்திரா மாநிலம் அம்மபள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 300 கனஅடி நீர் நேற்று முன்தினம் (செப். 30) இரவு 09.30 மணிமுதல் 4.00 மணி நேரத்திற்கு திறக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு தொடர் மழையின் காரணமாக ஆற்றில் நீர் அதிகளவில் ஓடியது.

இதையடுத்து அக்கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

மேலும் வருவாய்த் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இதையும் படிங்க: புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது - உயர் நீதிமன்றம் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.