ETV Bharat / state

4 காவலர்களை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றிய டிஜிபி

author img

By

Published : Jul 27, 2019, 4:36 PM IST

திருப்போரூர்: பார் உரிமையாளர் தற்கொலை விவகாரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட 4 காவலர்களை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறை தலைவர் திரிபாதி

திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பார் உரிமையாளர் நெல்லையப்பன் காவல் துறை அலுவலர்கள் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி, கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாமல்லபுரம் காவல் இணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில் மாமல்லபுரம் காவல் இணை கண்காணிப்பாளர் சுப்புராஜ், திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி ஆகியோர் அதிமுக பிரமுகர் ஆனந்திற்கு லஞ்சப் பணம் கொடுத்திருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் பார் ஓனர் நெல்லையப்பனிடம் லஞ்சம் பெற்றதாக காவல் துறை அலுவலர்கள் மேல் வழக்குப்பதிவு செய்தனர். இதில், தொடர்புடைய கூடுதல் காவல் இணை கண்காணிப்பாளர் மாணிக்கவேல், காவல் இணை கண்காணிப்பாளர் சுப்புராஜ், ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட சுமார் 15 காவல் துறை அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் முக்கிய பல ஆவணங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறை டிஜிபி திரிபாதி இந்த வழக்கில் தொடர்புடைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாணிக்கவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் சில அதிகாரிகளும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Intro:Body:
பார் ஓனர் தற்கொலை விவகாரத்தில் டி.எஸ்.பி,ஏடி எஸ்.பி உட்பட 4 காவலர்களள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி டிஜிபி உத்தரவு..

திருப்போரூர் பகுதியை சேர்ந்த நெல்லையப்பன் என்பவர், போலீஸார் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதாகக் கூறி,கடந்த மே மாதம் 28ஆம் தேதி டி.எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ், திருப்போரூர் காவல் ஆய்வாளர் கண்ணன், கேளம்பாக்கம் ஆய்வாளர் பாண்டி மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்துக்கு லஞ்சம் பணம் கொடுத்தது தொடர்பாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து, டி.எஸ்பி. சுப்புராஜ், காவல் ஆய்வாளர்கள் கண்ணன், பாண்டி, உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி இது தொடர்பாக மாமல்லபுரத்தில் பணியாற்றிய டி.எஸ்.பி சுப்புராஜ்,ஏடி எஸ்பி மாணிக்கவேலு உட்பட அனைத்து காவலர்களின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து டி.எஸ்.பி சுப்புராஜ்,ஏடி எஸ்.பி மாணிக்கவேலு,ஆய்வாளர் பாண்டியன்,மதுவிலக்கு காஞ்சிபுரம் ரவிசந்திரன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி  டிஜிபி திரிப்பாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.