கோயம்புத்தூர்: பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த நேர்காணலை ஒளிபரப்பியதாக ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு திருச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசாரும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்றைய தினம் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று மாலையுடன் விசாரணை முடிந்த பிறகு, அவரை போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் பெலிக்ஸ் ஜெரால்டை ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, வருகின்ற மே 31ஆம் வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.