ETV Bharat / state

கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய 7 பேர்!

author img

By

Published : May 14, 2020, 12:35 PM IST

கரோனாவில் பாதிக்கப்பட்ட 7 பேர் வீடு திரும்பினார்கள்
கரோனாவில் பாதிக்கப்பட்ட 7 பேர் வீடு திரும்பினார்கள்

திருவள்ளூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 467 பேர் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஏற்கெனவே 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று (மே 13) மட்டும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த, ஒரு பெண் உட்பட ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி காவல் நிலையத்தில், இரண்டாம் நிலைய காவலராகப் பணியாற்றி வந்த காவலரும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

மேலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களை மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, கைதட்டி பரவசத்தோடு உற்சாகமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அதேசமயம் இவர்களை 14 நாட்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்; ஒரு சில அறிவுரைகளைக் கூறி தலைமை மருத்துவமனை மருத்துவர் அனுரத்தினா வழி அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: கரோனா நிவாரண அரிசி கடத்தல் - வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.