ETV Bharat / state

திடீரென தீப்பற்றி எரிந்த கார் - ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் அலறியடித்து ஓட்டம்

author img

By

Published : Mar 19, 2022, 4:38 PM IST

திடீரென தீப்பற்றி எரிந்த கார்
திடீரென தீப்பற்றி எரிந்த கார்

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் அருகே சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிலிருந்த ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சென்னை: ராயபுரத்தில் உள்ள ட்ராவல்ஸ் நிறுவனத்திலிருந்து வாடகை காரை ஓட்டுநர் மெய்ஞானம் என்பவர் எடுத்துக்கொண்டு பயணிகளுடன் ஆந்திர மாநிலம் தடா நோக்கிசென்று கொண்டிருந்தார்.

மாதவரம் ரவுண்டானவை கடந்து செல்லும் போது கார்பழுதடைந்தது போல இருந்ததால், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி இஞ்சின் முன்பக்கத்தை திறக்க முற்பட்ட போது தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து காரில்இருந்த பயணிகள் மூவர் கீழே இறங்கி, ஓட்டுநர் என 4 பேரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நண்பகல் உச்சி வெயிலில் கடும் அனல் காற்றுவீசதொடங்கியுள்ள நிலையில்கார்முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.

திடீரென தீப்பற்றி எரிந்த கார்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது.

இந்தச் சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றிய நிலையில் 4 பேர் உடனடியாக ஓட்டம் பிடித்ததால் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: மான் அமைச்சரவையில் 10 'சிங்'கங்கள்.. கவர்னர் மாளிகையில் இன்று பதவியேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.