ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை...103 வயது ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல்

author img

By

Published : Mar 18, 2022, 8:18 AM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதை கடந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

retired teacher sentenced to be 15 years imprisonment  thiruvallur sexual harassment  retired teacher sentenced to be 15 years imprisonment for sexually harassing a girl  sexual harassment  sexual harassment for child  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  பாலியல் வன்புணர்வு  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த முதியவர்  பாலியல் குற்றங்கள்
பாலியல் வன்புணர்வு

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே வசித்து வரும் 103 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர், கடந்த 2011ஆம் ஆண்டு, தனது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் சிறுமியின் பெற்றோற்க்கு தெரியவர, இது தொடர்பாக ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து, மத்திய புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 45 ஆயிரம் அபராதமும் விதித்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த கூலித்தொழிலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.