ETV Bharat / state

8 அணிகளுடன் அதிரடியாக ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்

author img

By

Published : May 30, 2023, 7:51 AM IST

8 அணிகளுடன் அதிரடியாக ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்!
8 அணிகளுடன் அதிரடியாக ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் 8 அணிகளுடன் வரும் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி அதன் இறுதிப்போட்டி நெல்லையில் நடைபெற உள்ளது.

8 அணிகளுடன் அதிரடியாக ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்!

திருநெல்வேலி: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசன் வரும் ஜூன் 12ஆம் தொடங்கி ஜூலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், பால்சி திருச்சி உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்கலில் இறுதிப்போட்டி உLபட 32 போட்டிகள் நடைபெறுகிறது. ஐபிஎல்-ஐப் போன்று இந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டிகளிலும் பி.ஆர்.எஸ் முறை இம்பேக்ட் பிளேயர், ரிசர்வ் பிளேயர் ரிசர்வ் டே வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மேலும், டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் டிஜிட்டல் தளத்திலும் இந்த ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் ஏழாவது சீசன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என்.பாபா, திருநெல்வேலி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் சரவண முத்து மற்றும் திருநெல்வேலி கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என். பாபா, “தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் ஏழாவது சீசன் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 12 வரை நடைபெறுகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உள்பட எட்டு அணிகள் இந்த சீசனில் பங்கேற்கின்றன. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி இந்த ஆண்டு பாலிசி திருச்சி அணி என்ற பெயருடன் போட்டிகளில் பங்கேற்கும்.

கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இந்த சீசனின் இறுதிப்போட்டி நெல்லையில் நடைபெறுகிறது. சென்னையில்தான் இறுதிப்போட்டி நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பணிகள் ஐ.பி.எல் போட்டிகள் நிறைவு பெற்ற பின் தொடங்க உள்ளதால், நெல்லையில் இந்த ஆண்டு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளை காண டிக்கெட் விலை 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் அதிகமான டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்பு உள்ள போட்டியாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் திகழ்கிறது.

கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளைபோல் இம்பேக்ட் பிளேயர், ரிசர்வ் பிளேயர் போன்றவை அறிமுகம் செய்யப்படுகிறது. ரிசர்வ் டே வழிமுறையும் இந்த ஆண்டு முதல் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை டி.ஆர்.எஸ் நடைமுறையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்தகைய வழிமுறையை மாவட்ட அளவிலான போட்டிகளில் கடைபிடிப்பது இதுவே முதல் முறை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: CSK Champion: சி எஸ் கே அணி சாம்பியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.