ETV Bharat / state

பண மோசடி, திருமணத்தை மீறிய உறவு; நெல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கொலையில் நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 2:45 PM IST

Nellai Murder: நெல்லை மாவட்டம் பேட்டையில் மர்ம நபர்களால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கொலை
நெல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கொலை

திருநெல்வேலி: பேட்டை வி.வி.கே. தெரு, திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவில் நேற்று (நவ 14) இரவு மர்ம கும்பலால் அடையாளம் தெரியாத நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடணடியாக பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து வந்த பேட்டை காவல் துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்ததனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோடீஸ்வரன் நகரை சேர்ந்த காதர் ஒலி மகன் அஸார் முகமது (35 ) என்பதும் இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. முகமதுவிற்கு ஹமிதா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கொலைக்கான காரணம்: திருமணத்தை மீறிய உறவு மற்றும் பண மோசடி புகார் காரணமாகவே முகமது வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகமது பல நபர்களிடம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் செல்வம் என்பவரிடம் 50 லட்சம் ரூபாய் லோன் வாங்கி தருவதாக முகமது அசாருதீன் கூறியுள்ளார். இதற்காக செல்வம் தனது தங்க நகைகளை அசாருதினிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லோன் வாங்கி கொடுக்காமல் முகமது செல்வத்தை ஏமாற்றியுள்ளார்.

அதைபோல மகாராஜன் என்பவரின் மனைவியுடன் முகமது அசாருதீன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டிருந்தாகவும் இதனால் மகாராஜன் முகமது மீது கடும் கோவத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதை அறிந்த செல்வம், மகாராஜனுடன் கூட்டு சேர்ந்து முகமது அசாருதீனை கொலை செய்ய முடிவெடுத்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் முகமது அசாருதீன் மகாராஜன் வீட்டிற்கு சென்றதை அறிந்த மகாராஜன் மற்றும் செல்வம் இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து மகராஜன் வீட்டில் இருந்த முகமது அசாருதினை அரிவாளால் வெட்டி உள்ளனர். அப்போது வலி தாங்க முடியாமல் வீட்டிலிருந்து தப்பி ஓடிய முகமதை துரத்திச் சென்று அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில், முகமது அசாருதின் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான மகாராஜனை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மற்றொரு முக்கிய குற்றவாளியான செல்வம் அவரது நண்பர்கள் சபரி, மணி, மந்திரமூர்த்தி மேலும் ஒரு மூர்த்தி ஆகிய நான்கு பேரும் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவு மற்றும் பண மோசடி விவகாரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திமுக பிரமுகரிடம் மோசடி செய்த ராசிபுரம் கவுன்சிலர்.. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.