திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனவே வரும் 26ஆம் தேதி முதல், 2020 மார்ச் 29ஆம் தேதி வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களிலுள்ள 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயன் பெற வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:உதயமானது 'தென்காசி' புதிய மாவட்டம்!