ETV Bharat / state

பொள்ளாச்சி சம்பவத்தில் துணைசாபநாயகர் மகன் மீது நடவடிக்கை இல்லை - ஸ்டாலின்

author img

By

Published : Oct 9, 2019, 11:57 AM IST

ஸ்டாலின்

திருநெல்வேலி: பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் மகன் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிந்தும், அது குறித்து எந்த ஒரு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மாதம் 21ஆம் தேதி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அரசியல் களம் சுடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம்,சிவந்திபட்டி, நொச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், நடக்கின்ற அதிமுக ஆட்சியில் பல கிராமங்களில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு ஏராளமான குறைகள் உள்ளது. கடந்த தேர்தலில் ஒரு சதவீத ஓட்டு கூடுதலாக பெற்றதால் அதிமுகவினர் ஆட்சியில் உள்ளனர். முதலில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக்கூறிய ஓபிஎஸ், பிறகு அவர்களுடனே சேர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்கள் இருந்துள்ளனர் அவர்களது மரணத்தில் சந்தேகம் வரவில்லை, ஆனால் ஜெயலலிதா மரணத்தில் மட்டும் சந்தேகம் எழுந்தது, இதனை திமுகவினர் சொல்லவில்லை அதிமுகவினரே கூறிவருகின்றனர்.

தற்போது நடக்கும் ஆட்சியில் பொதுப்பணித்துறை முதல் உள்ளாட்சித்துறை என அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. மேலும் பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் மகன் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார் என குடற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அதுகுறித்து எந்த ஒரு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது என்றார்.

Intro:பொள்ளாச்சியில் ஆளுங்கட்சியின் துணை சபாநாயகர் மகன் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார் அது குறித்து எந்த ஒரு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. நாங்குநேரியில் திண்ணை பிரசாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.Body:பொள்ளாச்சியில் ஆளுங்கட்சியின் துணை சபாநாயகர் மகன் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார் அது குறித்து எந்த ஒரு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. நாங்குநேரியில் திண்ணை பிரசாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.


வருகின்ற 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் அரசியல் களம் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி ஆகிய பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டரிந்தும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்தும் வாக்குகள் சேகரித்தார் அப்போது அவர் கூறுகையில்,

நடக்கின்ற அதிமுக ஆட்சியில் பல கிராமங்களில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு ஏராளமான குறைகள் உள்ளது. 1 சதவீத ஓட்டு கூடுதலாக பெற்றதால் அதிமுகவினர் ஆட்சியில் உள்ளனர். ஜெயலலிதா மரணத்தில் மர்ணம் உள்ளது என ஓபிஎஸ் கூறினார் எடப்பாடியை முதல்வராக ஆக்கியது தவறு என்றார் ஆனால் பின்பு அங்கேயே இணைந்துகொண்டார்.

தமிழகத்தில் பல முதல்வர்கள் இருந்துள்ளனர் அவர்களது மரணத்தில் சந்தேகம் வரவில்லை ஆனால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுந்தது இதனை திமுகவினர் சொல்லவில்லை அதிமுக தான் கூறியது.

ஜெயலலிதாவின் தயவில் பதவிக்கு வந்தவர் எடப்பாடி, அதிமுகவினர் ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே முயற்சிக்கின்றனர். ஒன்றிரண்டு எம்எல்ஏக்கள் போய் விட்டால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும்


பொது பணி துறை முதல் உள்ளாட்சி துறை என அனைத்து துறைகளிலும் ஊழல். அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கும் காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான். எடப்பாடி ஆட்சி எடுபிடி ஆட்சி மோடியின் அனைத்து திட்டங்களையும் அப்படியே ஆதரிக்கின்றனர். நீட் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களையும் ஆதரிக்கின்றார் தமிழக முதல்வர்.


பொள்ளாச்சியில் ஆளுங்கட்சியின் துணை சபாநாயகர் மகன் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார் அது குறித்து எந்த ஒரு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது என்றும் பேசினார். திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.