ETV Bharat / state

திமுக - பாஜக நிர்வாகிகள் மோதல்; போலீசார் வழக்குப்பதிவு

author img

By

Published : Oct 18, 2022, 8:50 PM IST

பணகுடி பேரூராட்சியில் திமுக கவுன்சிலரும், பாஜக மண்டல தலைவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மண்டையை உடைத்ததாக திமுக பாஜக நிர்வாகிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புகார்
மண்டையை உடைத்ததாக திமுக பாஜக நிர்வாகிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புகார்

திருநெல்வேலி: பணகுடி பேரூராட்சி திமுகவைச் சேர்ந்த 1வது வார்டு கவுன்சிலர் கோபி கோபால கண்ணன். கடந்த மாதம் அவரது வார்டில் கழிவுநீர் வாறுகால் அமைப்பதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக நெல்லை மாவட்ட தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் பணகுடி பாஜக மண்டல தலைவர் வைகுண்ட ராஜாவுக்கும், திமுக கோபி கோபால கண்ணனுக்கும் அரசியல் ரீதியாக ஒருவருக்கொருவர் பகை உள்ளது. இந்நிலையில் இன்று காலை பணகுடி அருகில் உள்ள நதிபாறை கிராமத்தில் இடம் சம்பந்தமாக திமுகவினர் முறைகேடாக முள்வேலி போடுவதாக பாஜக மண்டல தலைவர் வைகுண்ட ராஜா புகார் தெரிவித்திருந்த நிலையில் திமுக கவுன்சிலர் கோபி கோபால கண்ணனுக்கும் வைகுண்ட ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாஜகவினர் கம்பியால் தன்னை தாக்கியதாகப் பேரூராட்சி கவுன்சிலர் கோபி கோபால கண்ணன் பணகுடி போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து அவர் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாஜகவைச் சேர்ந்த வைகுண்ட ராஜாவும் தன்னை திமுகவினர் தாக்கி, காரை உடைத்ததாகவும் போலீசில் புகார் செய்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஒருவருக்கொருவர் புகார் கூறி வருவதை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

பணகுடி பகுதியில் பாஜக மற்றும் திமுகவினர் சமீபகாலமாக சட்டரீதியாகயும் அரசியல் ரீதியாகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைக் கூறி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலின் தான் ஊருக்குள் பஸ் வராமல் தடுத்தார் - போக்குவரத்து கழக அதிகாரியின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.