ETV Bharat / state

பல் பிடுங்கிய விவகாரம்..ஏ.எஸ்.பி பல்வீர் சிங் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 3:28 PM IST

Etv Bharaஏ.எஸ்.பி பல்வீர் சிங் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்t
பல் பிடுங்கிய விவகாரம்

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஏ.எஸ்.பி பல்வீர் சிங் இன்று நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திருநெல்வேலி : அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லை பிடுங்கி துன்புறுத்தியதாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சிபிசிஐடி போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலத்திற்கு, திருநெல்வேலி ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர், கடந்த மார்ச் 26 ஆம் தேதி தனது விசாரணை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து மார்ச் 29ஆம் தேதி முதலமைச்சர் உத்தரவிட்டார். ஏப்ரல் மூன்றாம் தேதி சார் ஆட்சியரின் இடைக்கால விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.

அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், உயர் மட்ட குழு விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, இரண்டு கட்டமாக அம்பாசமுத்திரம் உட்கோட்ட பிரிவுகளில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி , விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணையை நடத்தினார். அதனைத்தொடர்ந்து. ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் ADSP சங்கர் இந்த வழக்கு விசாரணயை மேற்கொண்டர். இதில் வேத நாராயணன், சூர்யா, வெங்கடேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோர்கள்களின் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய உதவி காவல் துறை கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 14 காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது, இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசாரால் திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 294b, 342, 323, 324, 506(1), 109, 201, 167, 220, இளஞ்சிரார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 75 ஆகிய பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு சாட்சியங்களை நேரடியாகவும், காவல் நிலையத்திற்கும் வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே, பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது நெல்லை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் அண்மையில் தாக்கல் செய்தனர். அதில் காவல் துறையைச் சேர்ந்த 14பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி திருவேணி முன்னிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உள்பட 14 பேரும் நேரில் ஆஜராகினர். இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்களும், பல்வீர் சிங் தரப்பு வழக்கறிஞர்களும் குற்றப்பத்திரிகை நகல் கேட்டுள்ளனர்.

ஆனால், குற்றப்பத்ரிகை நகல் கொடுப்பதற்கு முன்பாக ஜாமின் பெற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞரும், நேதாஜி சுபாஷ் சேனையின் நிறுவனத் தலைவருமான மகாராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் உள்பட 14 பேரும் இதுவரை ஜாமீன் கோரவில்லை. இதனை அடுத்து நீதிபதி திருவேணி வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர் நேதாஜி சுபாஷ் சேனையின் நிறுவனத் தலைவர் மகாராஜன் இந்த வழக்கு விசாரணையானது நேர்மையாக நடக்கும் என எங்களுக்கு தெரியவில்லை. எனவே, வழக்கு விசாரணையை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும். மேலும், குற்றவாளிக்கு ஆதரவாக அரசு வழக்கறிஞர், ஜாமீன் தாரர்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை மலை மீது இருக்கும் அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.