ETV Bharat / state

மாஞ்சோலை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன்.. பொதுமக்கள் அச்சம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 4:25 PM IST

Etv Bharat
Etv Bharat

Arikomban elephant: மாஞ்சோலை அருகே உள்ள ஊத்து எஸ்டேட் பகுதியில் அரிக்கொம்பன் முகாமிட்டுள்ள நிலையில், வனத்துறையினர் ரேடார் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அரிக்கொம்பன் யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாஞ்சோலை வனப்பகுதியில் முகாமிட்ட அரிக்கொம்பன்.. பொதுமக்கள் அச்சம்

திருநெல்வேலி: கேரள மாநிலத்திலும், தமிழகத்தின் தேனி மாவட்டத்திலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் காட்டு யானை வனத்துறையால் பிடிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியான மேல் கோதையாறு அணை அருகே குட்டியாறு டேம் பகுதியில் விடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அரிக்கொம்பன் யானையின் கழுத்தில் ரேடர் கருவியை பொருத்தி, வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மாஞ்சோலை அருகே உள்ள ஊத்து தேயிலை தோட்டப்பகுதிக்குள் அரிக்கொம்பன் நடமாடியது.

இதையடுத்து வனத்துறையினர் 3 நாட்கள் இப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். அதன்பின்னர் அரிக்கொம்பன், மீண்டும் கோதையாறு வனப்பகுதிக்கு சென்றது. அரிக்கொம்பன் விடப்பட்ட குட்டியாறு அணையில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதி அமைந்துள்ளது.

இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசிக்கின்றனர். எனவே, அரிக்கொம்பன் யானையால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் அச்சப்படி, செப்டம்பர் மாதம் அரிக்கொம்பன் காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் ஊத்து தேயிலை தோட்ட பகுதி அருகே உள்ள நாலாங்காடு என்ற வனப்பகுதியில் அரிக்கொம்பன் முகாமிட்டுள்ளது.

ஏற்கனவே, அரிக்கொம்பன் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த ரேடார் கருவி மூலமாக 6 பேர் கொண்ட வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில் தற்போது தேயிலை தோட்ட பகுதி அருகே வந்துள்ளதால் கூடுதலாக சுமார் 15 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் அரிக்கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இரண்டாவது முறையாக அரிக்கொம்பன் காட்டு யானை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வருவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்த 10 அடி நீள ராஜநாகம் மீட்பு! அடர் வனத்திற்குள் விட்ட வனத்துறையினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.