ETV Bharat / state

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 11:22 AM IST

வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…விவசாயிகள் கொண்டாட்டம்!
வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…விவசாயிகள் கொண்டாட்டம்!

vaigai dam: பெரியாறு பிரதான கால்வாய் பாசன வசதிக்காக வைகை அணையிலிருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தேனி: தேனியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து, அதனுடைய முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்று கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், பெரியாறு பிரதான கால்வாய் பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து இன்று (நவ.10) தண்ணீர் திறக்கப்பட்டது.

வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர், ஏழு மதகுகள் வழியாக ஆர்ப்பரித்து கரம் புரண்டு ஓடத் தொடங்கியது. வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில் 70 அடிக்கு மேல் நிரம்பியதால் பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக, இன்று முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு 900 கன அடி நீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின், அடுத்த 75 நாட்களுக்கு அணையின் இருப்பைப் பொறுத்து தேவைக்கு ஏற்ப என மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் சுமார் 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறவுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு வைகை அணியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு பூக்களை தூவி வரவேற்றனர்.

இதையும் படிங்க: “ஊழல் மற்றும் மதத்தை வலுவாக எதிர்ப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே” - எம்பி ஆ.ராசா பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.