ETV Bharat / state

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக 1130 கன அடி நீர் இன்று (டிச.19) முதல் 90 நாட்களுக்குத் திறப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 9:59 PM IST

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

Vaigai Dam Open: வைகை அணையிலிருந்து பெரியார் கால்வாய் மற்றும் திருமங்கல பிரதான கால்வாய்களுக்கு 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் ஒரு போகப் பாசன வசதிக்காக 1130 கன அடி நீர் இன்று முதல் 90 நாட்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தேனி: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர் வரத்துக் கூடுதலாக வரத் தொடங்கியது. இதனால், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியைத் தாண்டிய நிலையில் வைகை அணையிலிருந்து விவசாய நிலங்களுக்காகத் தண்ணீர் திறந்துவிடத் தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “வைகை அணையிலிருந்து பெரியார் பாசனப் பகுதியில் கீழ் உள்ள ஒரு போகப் பாசன பரப்பிற்காக 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கு 900 கன அடி வீதமும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு ஒரு போகப் பாசன வசதிக்காக 230 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இதன்மூலம் வைகை அணையிலிருந்து மொத்தமாக 1,05,002 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 1130 கன அடி நீர் முப்பது நாட்களுக்கு முழுமையாகவும் 60 நாட்களுக்குத் தண்ணீரின் இருப்பை பொருத்து மொத்தமாக 90 நாட்களுக்கு 5 ஆயிரத்து 858 மில்லியன் கன அடி தண்ணீரை இன்று முதல் திறக்கப்பட்டது.

வைகை அணை தற்போது 69.55 அடி இருக்கின்ற நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து 6199 கன அடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் 3,699 கன அடியாகவும் அணையின் இருப்பு 5,716 வெள்ளி கன அடியாக இருந்து வருகிறது” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எண்ணூர் பகுதியில் கடந்த 15 நாட்களாக 50% எண்ணெய் கசிவுகள் கூட அகற்றப்படவில்லை - பொது மக்கள் குற்றச்சாட்டு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.