ETV Bharat / state

வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு - விடுக்கப்பட்ட 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

author img

By

Published : Dec 5, 2019, 8:24 PM IST

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டியதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

vaigai dam 2nd alert flood warning
vaigai dam 2nd alert flood warning

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி ஆகும். தற்போது இந்த அணைக்கு முல்லைப்பெரியாறு, மூலவைகை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து தண்ணீர் வருவதால் வேகமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. காலையில் 67 அடியாக இருந்த நீரின் அளவு, மாலை 68.27அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 5 ஆயிரத்து 388 கன அடியாகவும், நீர்வரத்து 2 ஆயிரத்து 274 கன அடியாகவும் இருக்கிறது.

மதுரையின் குடிநீருக்காக 60 கன அடி மற்றும் 58ஆம் கால்வாய்க்காக 100 கன அடி வீதம் மொத்தம் 160 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், இன்றிரவு அணையின் நீர்மட்டம் 11:00 மணிக்கு 68.5 அடியை எட்டி விடும் என்பதால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வைகை அணை

மேலும், நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணையின் பாதுகாப்பு கருதி, 7 பெரிய மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

Intro: வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் 5மாவட்ட மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று இரவு விடப்பட உள்ளது. பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு.
Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66அடியை எட்டியதால் டிசம்பர் 3ஆம் தேதி வைகை ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள 5மாவட்ட மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.. 71அடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, மூலவைகை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரால் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 67அடியாக இருந்தது. தொடர்ந்து அணையின் நீர்வரத்து அதிகரித்து இன்று மாலை 68.27அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 5388மி.கன அடியாகவும் நீர்வரத்து 2274 கன அடியாக இருக்கிறது. மதுரை குடிநீருக்காக 60கன அடி மற்றும் 58ஆம் கால்வாய்க்கு 100கன அடி என மொத்தம் 160கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் இன்று இரவு 11.00மணிக்கு 68.5அடியை எட்டி விடும் என்பதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 69அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு அணையின் பாதுகாப்பு கருதி வருகின்ற நீரை அப்படியே 7பெரிய மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் என்றனர்.
Conclusion: தொடர்ந்து வைகை அணையின் நீர்மட்;டம் உயர்ந்து வருவதால் 5மாவட்ட மக்கள், விவசாயிகள் உள்பட பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.