ETV Bharat / state

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ஓ.பி.எஸ்

author img

By

Published : Jan 15, 2020, 9:21 PM IST

deputy cm o.panneerselvam
deputy cm o.panneerselvam

தேனி: துணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார்.

தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை பொங்கலை அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினர், அதிமுக தொண்டர்களுடன் பொங்கலை கொண்டாடினார்.

அதேபோல் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது வீட்டில் இன்று குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். இதில் ஓ.பி.எஸ் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ஜெயபிரதீப், பேரப்பிள்ளைகள் ஆகியோர் உற்சாகமாக பொங்கல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தை பொங்கலை கொண்டாடும் ஓபிஎஸ்

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வருகை தந்த நண்பர்கள், உறவினர்கள், கட்சியினர் அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார்.

Intro: பெரியகுளத்தில் குடும்பத்தினருடன் தனது இல்லத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய தமிழக துணை முதலவர் ஓ.பி.எஸ்.
Body:         தமிழர் திருநாளாம் தைத்திருநாள் விழா இன்று உலகத்தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அக்ரஹாரத்தெருவில் உள்ள தனது வீட்டில் இன்று குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். இதில் ஓ.பி.எஸ் அவரது மனைவி விஜயலட்;சுமி, மகன் ஜெயபிரதீப் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோர்கள்; பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.



Conclusion: இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வருகை தந்த நண்பர்கள், உறவினர்கள், கட்சியினர் அணைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்து துனை முதல்வர் பொங்கல் கொண்டாடினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.