காரில் கடத்தப்பட்ட ரூ.1.5  லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்... 5 பேர் கைது...

author img

By

Published : Sep 9, 2022, 2:24 PM IST

காரில் கடத்தப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

தேனி அருகே ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் கோபாலாபுரம் - கண்டமனூர் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேர் இரண்டு இரு சக்கர வாகனத்தில் தனித்தனியே வந்த நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் தேனி மாவட்டம் கோபாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத்(29) மற்றும், கண்டமனூரை சேர்ந்த பிரவீன்(28) என்பதும் அதே பகுதியில் காரில் வந்த நபர்களிடம் இந்த பொருட்களை வாங்கியதும் தெரியவந்ததது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து காரை மடக்கி பிடித்ததில் .‌ 11 மூடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.