ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷமருந்தி ஒருவர் தற்கொலை!

author img

By

Published : Oct 6, 2020, 5:57 PM IST

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷமருந்தி ஒருவர் தற்கொலை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷமருந்தி ஒருவர் தற்கொலை

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி வட்டம் காமக்காபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (50). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு சீராளன், அமுதவாணன் என்னும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று (அக். 06) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற அர்ஜுனன் அங்கு திடீரென நிலைதடுமாறி மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட, பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர், அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அவர் விஷமருந்தியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த காவல் துறையினர் இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் துறையினர், அர்ஜுனன் எதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார், எதற்காக இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்‌.

இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை... பிள்ளைகளுடன் பெண் தற்கொலை முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.