நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையானது நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் அரசுத் தரப்பு சாட்சியங்களை விசாரித்துவருகின்றனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு வாகனங்களை வழங்கிய உரிமையாளர் நவ்ஷத், இடைத்தரகர் நவ்புல் ஆகிய இருவரிடம் இன்று (செப்டம்பர் 8) விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின்போது டிஐஜி முத்துச்சாமி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் இருவரிடமும் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு; அதிமுக வெளிநடப்பு!