ETV Bharat / state

கூடலூரில் பழங்குடி மக்களின் புத்தரி திருவிழா கொண்டாட்டம்.. நெற்கதிர்களை குலதெய்வத்திற்கு படைத்து வழிபாடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 8:01 AM IST

கூடலூரில் பழங்குடி மக்களின் புத்தரி திருவிழா கொண்டாட்டம்.
கூடலூரில் பழங்குடி மக்களின் புத்தரி திருவிழா கொண்டாட்டம்.

Harvest festival: அம்மனுக்கு நெற்கதிர்களைப் படைத்து விவசாயத்தைக் காக்கும் விதமாக கூடலூரில் பழங்குடி மக்களின் புத்தரி திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டது


நீலகிரி: கூடலூா் புத்தூா் வயல் பகுதியைச் சேர்ந்த பழங்குடி விவசாயிகள் துலாம் மாதத்தில் (ஐப்பசி மாதம்) விரதம் இருந்து, புதிதாக விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து, நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு எடுத்து படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில், நேற்று (அக்.28) விவசாயிகள் அறுவடை செய்த கதிர்களை அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி, புத்தரி திருவிழாவைக் கொண்டாடினர். இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான புத்தூர் வயல் தொரப்பள்ளி மேம்பாலக்கோடு உட்பட்ட பல்வேறு விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்து பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். ஜீரகசால், கெந்தகசால், மர நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய நெல் வகைகளை இவர்கள் பயிரிட்டு வருகின்றனர்.

வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்கள் என்பதால், யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து தங்களது விவசாயப் பயிர்களையும், விவசாய நிலத்தையும் பாதுகாக்க இந்த அறுவடை திருவிழா பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தென்மேற்குப் பருவமழை துவங்கியதும் ஐப்பசி மாதத்தில் வயல்களைத் தயார் செய்து நாற்று நட்டு, வயல்களில் வளரும் தரமான பால் கதிர்களை பழங்குடியின மக்களின் பொது குலதெய்வமான வனதேவதை கடவுளுக்கு படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த பாரம்பரிய புத்தரி விழாவில் பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான தீர்வு சாத்தியமா? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.