ETV Bharat / state

தாவரவியல் பூங்காவில் இன்று முதல் கோடை விழா தொடக்கம்

author img

By

Published : May 27, 2019, 11:25 PM IST

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கோடை விழா நடைபெறுகிறது.

ooty

உதகையில், மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், அரசு தாவரவியில் பூங்காவில் இன்று முதல் கோடை விழா, கலை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவை நீலகிர மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குத்துவிலக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

கோடை விழா காட்சிகள்

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பரதநாட்டியம், கர்நாடகாவின் டொல்லுகுனிதா, கேரளாவின் திருவாதுரை நடனம், தெலங்கானாவின் பாரம்பரிய நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

உதகை                                 27-05-19
உதகை தாவரவியல் பூங்காவில் தொடங்கி உள்ள கோடை விழா கலை நிகழச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்….   இந்த ஆண்டு கோடை சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி கடந்த 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை 2 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மலர் கண்காட்சி நிறைவடைந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து உதகைக்கு வந்த வண்ணமாக உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணபடுகிறது. இந்த நிலையில் தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக இன்று முதல் கோடை விழா கலை நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
   5 நாட்கள் நடைபெறும் இந்த கோடைவிழாவை நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தமிழகத்தின் பரதநாட்டியம், கர்நாடக மாநிலத்தின் டொல்லுகுனிதா, கேரளாவின் திருவாதுரை நடனம், தெலுங்கானாவின் பாரம்பரிய நடனம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
பேட்டி: இன்னசென்ட் திவ்யா – நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.