ETV Bharat / state

சுடுகாட்டிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்பு; புதரில் வீசிச்சென்ற கொடூரம்!

author img

By

Published : Sep 13, 2019, 8:33 AM IST

Infant rescued from cemetery

நீலகிரி: உதகை அருகே மஞ்சனக்கொரை சுடுகாடு பகுதியில் உள்ள புதரில் பிறந்து ஒருமணி நேரமேயான பஞ்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சனக்கொரை கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தின் எல்லையில் சுடுகாடு அமைந்துள்ளது. நேற்று மாலை அந்த சுடுகாடு வழியாக மஞ்சனக்கொரையைச் சேர்ந்த கீர்த்தி, சகாயமேரி ஆகியோர் சென்றபோது ஒரு புதரிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

இருவரும் புதர் அருகே சென்று பார்த்தபோது ஆண் குழந்தை ஒன்று துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்பகுதியில் நாய்கள் சுற்றித்திரிந்ததை அடுத்து, குழந்தையை மீட்ட பெண்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சுடுகாட்டிலிருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை

உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் சைல்டு லைன் அமைப்பினருக்குத் தகவல் தெரிவித்து குழந்தையை உதகை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் மையத்தில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை புதரில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பிறந்து ஒருமணி நேரமேயான பச்சிளம் குழந்தையை சுடுகாட்டில் உள்ள புதரில் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:OotyBody:உதகை அருகே மஞ்சனக்கொரை சுடுகாடு பகுதியில் உள்ள புதரில் பிறந்து ஒரு மணி நேரமான பஞ்சிளம் ஆண் குழந்தை மிட்பு. உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை .

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சனக்கொரை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் அருகே சுடுகாடு உள்ளது. நேற்று மாலை சுடுகாடு வழியாக மஞ்சனக்கொரையை சேர்ந்த கீர்த்தி , சகாயமேரி ஆகியோர் சென்ற போது ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இருவரும் புதர் அருகே சென்று பார்த்த போது ஒரு ஆண் குழந்தை துணியில் சுற்றி வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது. அருகில் நாய்கள் இருந்ததால் குழந்தையை எடுத்த அவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கொடுத்து குழந்தையை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளங் குழந்தைகள் மையத்தில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. பிறந்து ஒரு மணி நேரமே ஆன ஆண் குழந்தை தற்போது நலமுடன் உள்ளது. குழந்தையை புதரில் வீசி சென்ற தாய் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து ஒரு மணி நேரமே ஆன குழந்தையை சுடுகாட்டில் உள்ள புதரில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.