ETV Bharat / state

டீசலை எரிபொருளாக கொண்டு இயக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!!

author img

By

Published : Jan 13, 2023, 4:28 PM IST

டீசலை எரிபொருளாக கொண்டு இயக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
டீசலை எரிபொருளாக கொண்டு இயக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

குன்னூர் பணிமனையில் உருவாக்கப்பட்ட, டீசலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் நீராவி என்ஜின் 160 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து சோதனை ஓட்டத்தில் வெற்றிகரமாக குன்னூரை வந்தடைந்தது

டீசலை எரிபொருளாக கொண்டு இயக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

நீலகிரி: ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கரத் தண்டவாள அமைப்புடனும், யுனெஸ்கோ (unesco) அமைப்பு சார்பில் உலகப் பாரம்பரிய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது, நீலகிரி மலை ரயில்.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஸ்விட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு தருவிக்கப்பட்ட இந்த மலை ரயிலின் என்ஜின், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலம் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு பல ஆண்டுகளாக மலை ரயிலை இயக்கி வந்தனர். நிலக்கரித் தட்டுப்பாடு மற்றும் இதிலிருந்து வெளியேறும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும் கரித்துகள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்களால் வனப்பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், பர்னஸ் ஆயிலை எரிபொருளாக கொண்டு இயங்கும் வகையில் என்ஜினில் மாற்றம் செய்யப்பட்டது.

பின்னர் காற்று மாசைக் குறைக்கும் முயற்சியாக பர்னஸ் ஆயிலில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் டீசலை எரிபொருளாகக் கொண்டு நீராவி மூலம் இயங்கும் வகையில், முதல் மலை ரயில் என்ஜின் வடிவமைக்கப்பட்டது. இது வெற்றி பெற்றதைத்தொடர்ந்து இரண்டாவதாக டீசலை எரிபொருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் என்ஜின் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.

இதனை வடிவமைத்த சீனியர் டெக்னீஷியன் மாணிக்கம் கூறும் போது, 'நிலக்கரி தட்டுப்பாட்டால், மலை ரயில் நீராவி என்ஜினுக்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது. இதன் காரணமாக பர்னஸ் ஆயிலை எரி பொருளாகக் கொண்டு நீராவி என்ஜின் இயக்கப்பட்டது.

பின்னர் காற்று மாசை குறைக்கும் முயற்சியாக பர்னர்ஸ் ஆயிலில் இருந்து தற்போது டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும் நீராவி என்ஜின் குன்னூர் பணிமனையில் உருவாக்கப்பட்டது. இன்னும் மீதமுள்ள ஒரு பர்னஸ் ஆயில் நீராவி என்ஜினும் விரைவில் டீசலை எரிபொருளாக கொண்டு இயங்கும் நீராவி என்ஜினாக மாற்றப்படவுள்ளதாக’ தெரிவித்தார்.

மலைகளின் அரசிக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ள, இந்த மலை ரயில் தற்போது புகையில்லாத வண்டியாக மாறியிருப்பது சுற்றுலாப் பயணிகளிடைய வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: குட்டி காஷ்மீராக மாறிய குன்னூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.