குன்னூரில் குப்பை மேலாண்மை பூங்கா!

author img

By

Published : Nov 1, 2019, 12:10 PM IST

நீலகிரி: ஆறு தூர்வாரப்படும்போது அகற்றப்படும் மண், குப்பைக்கழிவுகளைப் பயன்படுத்தி குன்னூரில் குப்பை மேலாண்மைப் பூங்காவை கிளீன் குன்னூர் அமைப்பினர் உருவாக்கியுள்ளனர்.

குன்னூரில் இயங்கிவரும் கிளீன் குன்னூர் அமைப்பு சார்பாக ஆறு தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணியில் எடுக்கப்பட்ட மண், குப்பைகளை குப்பைக்குழிகளில் கொட்டி அதன் மேற்புறம் புற்கள் வளர்க்கப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

குன்னூர் நகராட்சி நிர்வாகம், கிளீன் குன்னூர் அமைப்பின் சார்பாக குப்பைக்கூளம் மேலாண்மை பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமையேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர், நெகிழிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை தொடங்கிவைத்தார்.

குன்னூர் குப்பைக்கூள மேலாண்மை பூங்கா தொடக்கம்

பின்னர் பேசுகையில், "இந்தத் திட்டம் உள்பட குன்னூரில் பல்வேறு குப்பை மேலாண்மை திட்டங்களுக்காக 40 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வழங்கிய ஹைதராபாத் தொழிலதிபருக்கும் இந்தப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் கிளீன் குன்னூர் அமைப்பினருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: அறந்தாங்கியில் கனமழைக்கு வீடுகள் இடிந்து விழுந்து சேதம்!

Intro:குன்னூரில் குப்பை குழி பகுதியில்,  குப்பைகூளம் மேலாண்மை பூங்கா திறப்பு விழா குன்னூரில் நடைபெற்றது.
குன்னூரில் கிளீன் குன்னூர் அமைப்பு சார்பாக ஆறு துார் வாரும் பணி நடந்து வருகிறது. 

இதில் பல்லாயிரக்கணக்கான டன் அளவில், எடுக்கபட்ட மண் மற்றும் குப்பைகள், குப்பை குழியில் கொட்டப்பட்டு புற்கள் வளர்த்து பூங்காவாக மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, குப்பைகூளம் மேலாண்மை பூங்கா திறப்பு விழா குன்னூரில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, புதிய பிளாஸ்டிக் கம்ப்ரஸ் செய்யும் பேலிங் இயந்திரத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டம் உட்பட குன்னூரில் பல்வேறு குப்பை மேலாண்மை திட்டங்களுக்காக ரூ 40 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.
ஐதராபாத் நகரை சேர்ந்த தொழிலதிபர் ராஜ ஸ்ரீ மற்றும் குழுவினர் இந்த தொகையை வழங்கியுள்ளதற்கும், பணிகளை மேற்கொண்டு வரும்  'கிளீன் குன்னூர்' அமைப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்.





Body:ன்னூரில் குப்பை குழி பகுதியில்,  குப்பைகூளம் மேலாண்மை பூங்கா திறப்பு விழா குன்னூரில் நடைபெற்றது.
குன்னூரில் கிளீன் குன்னூர் அமைப்பு சார்பாக ஆறு துார் வாரும் பணி நடந்து வருகிறது. 

இதில் பல்லாயிரக்கணக்கான டன் அளவில், எடுக்கபட்ட மண் மற்றும் குப்பைகள், குப்பை குழியில் கொட்டப்பட்டு புற்கள் வளர்த்து பூங்காவாக மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, குப்பைகூளம் மேலாண்மை பூங்கா திறப்பு விழா குன்னூரில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, புதிய பிளாஸ்டிக் கம்ப்ரஸ் செய்யும் பேலிங் இயந்திரத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டம் உட்பட குன்னூரில் பல்வேறு குப்பை மேலாண்மை திட்டங்களுக்காக ரூ 40 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.
ஐதராபாத் நகரை சேர்ந்த தொழிலதிபர் ராஜ ஸ்ரீ மற்றும் குழுவினர் இந்த தொகையை வழங்கியுள்ளதற்கும், பணிகளை மேற்கொண்டு வரும்  'கிளீன் குன்னூர்' அமைப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.