ETV Bharat / state

வடிவேலு பாணியில் திருடச் சென்ற வீட்டில் மது அருந்திய கொள்ளையர்கள்!

author img

By

Published : Dec 10, 2019, 1:36 PM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கு மது அருந்திவிட்டு பின் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.

Theft at a locked house in Pattukkottai
Theft at a locked house in Pattukkottai

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (45). இவர் நேற்று மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கிரி வலத்திற்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் ஜெயபால் வீட்டினுள் லைட் எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஜெயபாலின் உறவினர் குமரேசன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், அங்கு வந்த குமரேசன் வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள லாக்கர், பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபால் பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டை பார்வையிட்டு இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை அடிக்கப்பட்ட வீடு

திருவண்ணாமலைக்கு சென்ற ஜெயபால் தகவல் தெரிவிக்கபட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். அவர் வந்து பார்த்தால்தான் என்னென்ன பொருட்கள் திருடு போய் உள்ளன என்பது தெரியவரும். மேலும் சினிமாவில் வடிவேலு திருடச் சென்ற இடத்தில் மது அருந்தி சாப்பிட்டுவிட்டு திருடிச் செல்வது போல், அடையாளம் தெரியாத நபர்களும் ஜெயபால் வீட்டில் மது அருந்திவிட்டு திருடிச் சென்றிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:

மளிகைக் கடைப் பூட்டை உடைத்து அரை மூட்டை வெங்காயம், பணம் கொள்ளை!

Intro:நள்ளிரவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளைBody:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பேராவூரணி ஸ்டேட் பேங்க் எதிர்ப்புறம் உள்ள தெருவில் வசிப்பவர் ஜெயபால் வயது 45. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலை கிரி வலத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவரது வீட்டினுள் லைட் எரிவதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்உஉடனடியாக ஜெயபாலின் உறவினர் குமரேசன் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பெயரில் அங்கு வந்த குமரேசன் வீட்டினுள் சென்று பார்த்த பொழுது வீட்டில் உள்ள லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது இதை அடுத்து பேராவூரணி போலீசாருக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை பார்வையிட்டு இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருவண்ணாமலைக்கு சென்ற ஜெயபாலுக்கு தகவல் கொடுத்ததும் ஜெயபால் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். அவர் வந்து பார்த்த பொழுது தான் என்னென்ன பொருட்கள் திருட்டுப் போய் இருக்கின்றன என்பது தெரியவரும்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.