ETV Bharat / state

தொடர் கனமழை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

author img

By

Published : Oct 21, 2022, 9:17 AM IST

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று (அக் 20) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல கனமழை வரை பெய்து வருகிறது.

இந்த கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அதன் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.