ETV Bharat / state

கரோனா பாதிப்பு: ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை!

author img

By

Published : Sep 11, 2020, 7:00 PM IST

தஞ்சாவூர்: திருவையாறு அருகே கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர், மன உளைச்சல் காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

elderly-man-commits-suicide-by-jumping-into-river
elderly-man-commits-suicide-by-jumping-into-river

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சிவப்பிரகாசம் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (59). இவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று, கடந்த 7ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த குமரேசன், திருவையாறு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இவரது உடல் உப்பு காச்சிபேட்டை பகுதியில் கரை ஒதுங்கியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா பாதிப்பு காரணமாக முதியவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கிசான் திட்டத்தில் ஈரோட்டில் 13 லட்சம் ரூபாய் மீட்பு - மாவட்ட ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.