ETV Bharat / state

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

author img

By

Published : Jan 15, 2021, 8:49 PM IST

Flooding at Courtallam Falls
Flooding at Courtallam Falls

குற்றாலம் அருவிகளில் மூன்று நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று அருவிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.

மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதனால் வரும் ஞாயிற்று கிழமை வரை அனைத்து அருவிகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பழைய குற்றால அருவிக்கு சென்ற ஆட்சியர் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள், பொதுமக்கள் அருவிகள் பகுதிக்கு செல்லாதவாறு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் - பொதுமக்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.