ETV Bharat / state

தேர்தல் பரப்புரை: திமுக,அதிமுகவை குற்றம் சாட்டும் ராதிகா சரத்குமார்

author img

By

Published : Mar 28, 2021, 10:20 AM IST

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி திருடர்கள் எனக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே தவிர மக்களுக்கான எந்தவித கருத்துக்களையும் தெரிவிப்பது இல்லை என நடிகை ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்ர்.

தேர்தல் பரப்புரை
தேர்தல் பரப்புரை

தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரச்சாரக் களம் விறுவிறுப்பாக உள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களை வைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பரப்புரை நடிகை ராதிகா சரத்குமார்

அந்த வகையில் மக்கள் நீதி மையத்தின் கூட்டணிக் கட்சியான சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் தங்கராஜ் என்பவரை ஆதரித்து ராதிகா சரத்குமார் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ’மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்க வேண்டுமென கமல்ஹாசன் தலைமையில் இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

திமுக-அதிமுக கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுகவினர் திமுவினரை திருடர்கள் எனவும், திமுகவினர் அதிமுவினரை திருடர்கள் எனவும் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டே உள்ளனர். ஆனால் தங்கள் மீதான ஊழலை நிரூபிக்க யாரும் தயாராக இல்லை. மக்களுக்கான கருத்துக்களையும் தெரிவிப்பதில்லை. மேலும் திமுக-அதிமுக கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக மாற்றி விட்டனர். கமல்ஹாசன், சரத்குமார் கூட்டணி மக்களுக்கான தேவைகள் குறித்து தொலைநோக்குப் பார்வையில் தேர்தல் அறிக்கை தயார் செய்து செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்: அமைச்சர் கேசி கருப்பண்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.