ETV Bharat / state

தென்காசியில் கனிம வளங்கள் கடத்தல் என பரவும் வீடியோ.. காவல்துறை நடவடிக்கை பாயுமா?

author img

By

Published : May 11, 2023, 10:25 AM IST

தென்காசி அருகே கனிம வளங்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி வருகிறது. இந்நிலையில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

smuggling
கனிம வளங்கள் கடத்தல்

கனிம வளங்கள் கடத்தப்படுவதாக இணையத்தில் வீடியோ பரவல்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கனிம வள கொள்ளைக்கு எதிராக பல மாதங்களாக பல்வேறு கட்சியினர் பல்வேறு விதமான போராட்டங்கள் செய்து வருகின்றனர். ஆனாலும் கடையம், ஆலங்குளம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான கனிம வள கொள்ளை தினசரி நடைபெற்று வருவதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முறையான அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்பொழுது வரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சமூக அலுவலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கனிம வள கொள்ளையை எதிர்த்து தேமுதிக கட்சியின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக வந்து ஆலங்குளம் பகுதியில் இருந்து ஏராளமான கனிம வள கொள்ளை ஏற்பட்டுள்ளது இதைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஆனாலும் தற்போது வரை அந்த பகுதியில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை உள்ளது. மேலும் கடையம் ஆகிய பகுதியில் இருந்தும் ஏராளமான கனிம வள கொள்ளை ஏற்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நேற்று சுமார் பத்திருக்கும் மேற்பட்ட டிராக்டர்கள், டிப்பர்கள் மூலமாக கடையநல்லூர் அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் கனிம வளக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சிறிதளவில் நடைபெற்ற கொள்ளை, தற்போது அதிகப்படியாக ஏற்பட்டதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இது குறித்ததான வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து எந்த விதமான நடவடிக்கையும், தற்பொழுது வரைக்கும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேர்ந்தமரம் பகுதியில் காலை நேரத்தில் லாரி மற்றும் டிராக்டர்களில் மணல், ஜல்லிகள் போன்றவை சட்டத்துக்கு புறம்பாக கடத்தப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சேர்ந்தமரம் காவல்துறை அதிகாரிகள் கனிம வளங்களைக் கடத்தும் வாகனங்களை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "ஐயா என் கிணத்த காணோம்" - வடிவேலு பட பாணியில் கதறிய கவுன்சிலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.