ETV Bharat / state

தேங்காய் வியாபாரி வீட்டில் 50 சவரன் நகை, ஒரு லட்சம் கொள்ளை

author img

By

Published : Feb 24, 2021, 8:38 AM IST

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே தேங்காய் வியாபாரி வீட்டில் 50 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jewels theft--one-lakh-robbery-at-coconut-traders-house-police-investigation
jewels theft--one-lakh-robbery-at-coconut-traders-house-police-investigation

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருணாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி பூமணி. இவர் தனது மனைவியோடு நேற்று முன்தினம்(பிப்.22) மதுரைக்கு சென்றுள்ளார். மகன் சங்கர் புங்கம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மதியத்திற்கு மேல் வீடு திரும்பிய சங்கர், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியைடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 50 சவரன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்தது.

இதுதொடர்பாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். இதனையடுத்து கொள்ளை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய சகோதரர்கள் நீதிமன்றத்தில் சரண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.