ETV Bharat / state

''குளு குளு''வென குற்றாலக் குளியல்... உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!

author img

By

Published : Jul 25, 2023, 3:48 PM IST

coutallam
குளு குளு வென குற்றாலக் குளியல்

தென்காசி மாவட்டத்தில் சாரல் மழை, இதமான சூழல் நிலவுவதால் களைகட்டி காணப்படும் குற்றாலம் மெயின் அருவி. குளிக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டுள்ளனர்.

குளு குளு வென குற்றாலக் குளியல்

தென்காசி: தென் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது, குற்றாலம். இது தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் சீசன் தற்போது களைகட்டத் தொடங்கி உள்ளது.

மேலும், மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வார விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, வார நாட்களிலும் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் தென்காசியில் கடந்த இரண்டு தினங்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகின்றது. இதனால் மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மேலும், பெண்கள் பகுதியில் அபாய வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் ஆண்கள் பகுதியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 24) மாலைப்பொழுதில் அதிகப்படியாக மழை பெய்ததால் குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி இல்லாமல் இருந்தது.

ஆனால், இன்று (ஜூலை 25)காலை முதல் சாரல் மழை உடன் அதிகப்படியாக மழை பெய்து வருவதால் ஆண்கள் பகுதியில் அருவியின் நடுப்பகுதி வரைக்கும் செல்லவிடாமல் ஓரமாக நின்று குளிக்க காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும், இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி களைகட்டி வருகிறது. இந்த ஆண்டு சீசன் வெகு சிறப்பாகவே காணப்படுகிறது என்கின்றனர். மேலும், தென்காசி மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழ்நிலையில் உள்ளதால், வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழையுடன் குளிர்ந்த காற்று அடிப்பதால் தென்காசி மாவட்டம் மட்டுமல்லாமல் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும், மெயின் அருவி பெண்கள் பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், குளிக்க அனுமதிக்கப்படவில்லை. சாரல் மழையுடன் குற்றாலத்தில் இதமான சூழல் நிலவும் நிலையில் அருவி கரையோரம் நின்று சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு சுற்றுலாப் பயணி கூறுகையில், ''நாங்கள் குற்றாலத்தில் அருவியில் குளிக்கலாம் என்று வந்தோம். ஆனால் தண்ணீர் அபாய வளைவைத் தாண்டி கொட்டுவதால் காவல்துறை எங்களை குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்தோம்'' என்றனர்.மேலும், இங்கு லேசான சாரல் விழுவதால் கிளைமைட் நன்றாக இருக்கிறது என்றனர்.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு வசதிகளா..? அமைச்சர் ரகுபதி பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.