ETV Bharat / state

'நமது அம்மா' ஆசிரியர் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர்!

author img

By

Published : May 17, 2019, 2:24 PM IST

Updated : May 17, 2019, 2:57 PM IST

cm

சிவகங்கை: 'நமது அம்மா' பத்திரிகையின் ஆசிரியர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடைபெற்ற 'நமது அம்மா' பத்திரிகை ஆசிரியர் மருது அழகுராஜ் இல்லத் திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

நமது அம்மா ஆசிரியர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர்

பின்னர் முதலமைச்சர் முன்னிலையில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோரும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

சிவகங்கை  ஆனந்த்
மே.17

திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சிவகங்கை: நமது அம்மா பத்திரிக்கையின் ஆசிரியர் இல்ல திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற நமது அம்மா பத்திரிக்கை ஆசிரியர் மருது அழகு ராஜ் இல்ல திருமண விழாவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்தனர்.

திருப்பத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் அமைச்சர்கள் RB. உதயகுமார், செல்லூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்டோரும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
Last Updated :May 17, 2019, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.