ETV Bharat / state

நாம் தமிழரைவிட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கினால் பாஜக பெரிய கட்சி என ஏற்றுக்கொள்கிறேன் - சீமான்

author img

By

Published : Feb 8, 2022, 10:04 AM IST

சீமான்
சீமான்

சிவகங்கையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்திற்கு வந்த சீமான் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தனித்து நின்று போட்டியிடுமா எனக் கேள்வி எழுப்பியதுடன் அவ்வாறு போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியைவிட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கினால் அதனைப் பெரிய கட்சி என ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

சிவகங்கை: நேரு பஜாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

இதில் செய்தியாளரைச் சந்தித்த சீமான், "மூன்றாவது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பில்லை. கட்சியாகவே கருதாதபோது எங்கள் வேட்பாளரைக் கண்டு திமுக அஞ்சுவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நீட் தேர்வு பற்றி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, நீட் தேர்வில் வென்றவர்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறினார்.

மேலும், நீட் தேர்வில் வென்றவர்களுக்குத் தனியார் கல்லூரியில் பணம் வசூல் செய்யாமலா சீட் வழங்குகிறார்கள் எனப் பேசியதுடன் பாஜகவும், காங்கிரசும் வெவ்வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்கு கொள்கை ஒன்றுதான் என்று கூறினார்.

இந்தியா என்பது 130 கோடி மக்களின் நாடு அல்ல சில, பல முதலாளிகளின் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பாஜக குறித்து கூறிய கருத்துக்குப் பதிலளிக்கையில், தனித்து நின்று போட்டியிட்டு நிம்மதியைத் தேடிய அதிமுக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த நிம்மதியைத் தேடியிருக்கலாமே எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், பாஜக 2024ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுமா? நாம் தமிழர் கட்சியைவிட பாஜக தனித்து நின்று ஒரு ஓட்டு வாங்க முடியுமா? அப்படி வாங்கினால் பெரிய கட்சி என ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறினார்.

மறைமுகத் தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்துவிடுகிறது. குடியரசுத் தலைவரையும் மக்களாகவே தேர்வுசெய்யும் முறை கொண்டுவர வேண்டும் என்று சீமான் கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகளை சரிபார்க்க சமூக நீதிக் கண்காணிப்புக்குழு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.