சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை (தனி) ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
பதிவுசெய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரியில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் வரும் மே 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக முத்துக்கிருஷ்ணன், சங்கரநாராயணன், அனில்குமார், சோனவானே, அனில் ஏ பாட்டில் ஆகிய நால்வர் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : கரோனா நோயாளிகளுக்கு ரிலையன்ஸ் வழங்கும் சலுகை!