ETV Bharat / state

கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

author img

By

Published : Jun 25, 2022, 3:55 PM IST

கோயில் குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு
கோயில் குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

காரைக்குடி அருகே கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை: காரைக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் முதியவர் பிச்சை. இவரது உறவினர்கள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். முதியவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஜுன் 24) மாலை அருகில் உள்ள கொப்புடையம்மன் கோயில் குளத்தில் அவர் குளிக்கச் சென்றார்.

அப்போது நிலைதடுமாறி குளத்திற்குள் விழுந்தவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இன்று (ஜூன் 25) காலை குளத்தில் குளிக்கச் சென்றவர்கள் நீரில் அவரது சடலம் மிதப்பதைக் கண்டு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸை தட்டிக்கேட்ட எஸ்ஐ-யின் மண்டை உடைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.