சிவகங்கை அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

author img

By

Published : Sep 22, 2021, 8:05 AM IST

கதிரவன்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி கதிரவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை : தேவகோட்டை அருகே பெரிய காரை கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன்(40). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பாஜகவில் தேவகோட்டை ஒன்றிய பொதுச் செயலாளராகக் கதிரவன் பதவி வகித்து வந்தார்.

இவர் நேற்று (செப் 21) காவனவயல் பகுதியில் கடையில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து அவர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கதிரவனுக்கும் காவனவயலைச் சேர்ந்த பெரியசாமி, வீரபாண்டி ஆகியோருக்கு ரியல் எஸ்டேட் தொடர்பாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அந்தக்கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம்: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.